குளச்சல் நகரமானது, மலபார் கடற்கரையின் ஓரத்தில், கன்னியாகுமரியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில், அமைந்துள்ளது. 1741 ஆம் ஆண்டு இந்நகரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற போரினைப் பற்றி பல பக்தர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐரோப்பிய நாட்டின் கப்பல் படைகள் இந்த போரில் இந்திய அரசரால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு கப்பல் படைகள் குளச்சல் நகரின் மீது போர் தொடுத்தபோது, திருவாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மன் என்பவரால், தோற்கடிக்கப்பட்டு, இந்நகரத்தில், டச்சு காலனி ஆதிக்கம் ஏற்படாத வண்ணம் முழுவதும் தடுக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில், ஐரோப்பிய கடற்படையை இந்திய வீரர்கள் வெற்றி கொண்ட ஒரே போர் இதுவேயாகும். இவ்வெற்றியானது மிகச்சிறிய குறுநில மன்னரின் படை செய்த மிகப்பெரிய சாதனையாகும்.
இப்போரின் போது, பல டச்சு படைவீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட வீரர்களுள், அட்மிரல் டி‘லென்னாய் என்பவரும் ஒருவர். இவர் அதன் பிறகு, மன்னர் மார்த்தாண்ட வர்மனின் படையில், மூத்த அட்மிரலாக 20 வருடங்களுக்குப் பணியாற்றினார்.