தென்னிந்தியாவில் அதிகமாகத் தரிசிக்கப்படும் ஆலயங்களில் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயமும் ஒன்றாகும். இக்கோவிலின் வாயிலை வெகு தொலைவிலிருந்தும் நம்மால் காணமுடியும்.
ஏனென்றால், இக்கோவிலின் கோபுரமானது, 134 அடி உயரத்திற்கு மிகக் கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுரத்தில் பல இந்து கடவுளர்களின் சிலைகளும், சிற்பங்களும் இந்து புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகளும் காணப்படுகின்றன.
இக்கோவிலின் வாயிலானது 21 அடி உயரத்துடன், மிக நுணுக்கமாகக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். வெளிப்புற சுவரை அடுத்து, வலதுபுறமாக இக்கோவிலின் பிரகாரம் அமைந்துள்ளது.
இப்பிரகாரம் நெடிகிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள சிறு சிறு மண்டபங்களும் சிறு கோவில்களும் உள்ளன. கிட்டத்தட்ட 30 இந்து தெய்வங்கள் இங்கு எழுந்தருளியிருப்பதால், சிவன் மற்றும் விஷ்ணு பக்தர்களிடையே, மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலின் கருவறையில் மிகப்பெரிய லிங்கமும், அதன் அருகில் விஷ்ணுவின் சிலையும் அமைந்துள்ளது.