சுவாலி என்பது ஒரு கறுப்பு மணல் கடற்கரையாகும். நகரத்திலிருந்து 28 கிமீ தொலைவில், ஹஸீராவிற்கு அருகில் உள்ள இந்த இடம், சற்றே உட்புறத்தில் உள்ள இடமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவே வந்து செல்லும் கறைபடாத கடற்கரையாக உள்ளது.
எனவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அமைதியையும், இயற்கையையும் ஒருங்கே காண முடியும். சுவாலியில் கந்தகம் மற்றும் இரும்பு ஆகியவை மிகுந்திருக்கும் இரண்டு கிணறுகளும் உள்ளன. இந்த கடற்கரையையொட்டி சவுக்கு மரங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.