சட்டிஸ்கர் பிரதேசமானது புராதன காலத்தில் ‘தக்ஷிண் கோஷால் (கோசலம்)’ என்று அழைக்கப்பட்டு ராமாயணம் மஹாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஹிந்து வம்ச மன்னர்கள் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். எனவே அவர்கள் தங்களது ஆட்சிக்காலங்களில் எழுப்பிவிட்டுச்சென்ற பல்வேறு கோயில்களை இப்பிரதெசத்தில் பார்க்கலாம்.
அவற்றில் சில முக்கியமான கோயில்களை இந்த சர்குஜா மாவட்டம் தன்னுள் கொண்டிருக்கிறது. மாவட்டத்தலைநகரான அம்பிகாபூரிலிருந்து 70 கி.மீ தூரத்த்தில் இந்த தீபாதிஹ் எனும் கோயில் ஸ்தலம் அமைந்திருக்கிறது. சம்ரி தாலுக்காவில் உள்ள இந்த ஸ்தலத்துக்கு சாதாரண மண் சாலையின் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
இந்த ஸ்தலத்தில் ஷங்கர் கோயில் எனும் பிரதானக்கோயிலோடு இன்னும் நான்கு இதர தெய்வங்களுக்கான கோயில்களும் இடம்பெற்றிருக்கின்றன. விஷ்ணு பஹவான், கார்த்திகேயா, கணேஷா மற்றும் மஹா துர்க்கா ஆகியோருக்கான கோயில்கள் ஷங்கர் கோயிலை சுற்றி அமைந்துள்ளன.
இந்த வளாகத்தை சுற்றி காணப்படும் கோயில் இடிபாடுகள் மற்றும் குள அமைப்புகள் போன்றவை இங்கு திராவிட மன்னர்களின் ஆட்சி நிகழ்ந்திருப்பதை குறிக்கும் விதத்தில் காணப்படுகின்றன.
கலையம்சத்தோடு பொறிக்கப்பட்டிருக்கும் மஹிசுராமர்த்தினி சிற்பக்குடைவு ஒன்றை இந்த இடிபாடுகளில் காணமுடிகிறது. சுவர் போன்ற அமைப்புகளில் வடிக்கப்பட்டிருக்கும் பல்வேறு நுணுக்கமான சிற்ப வடிப்புகளை இந்த ஸ்தலத்தில் பார்த்து ரசிக்கலாம்.
கடவுள்களின் உருவங்கள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட அற்புதமான தூண் வடிவங்களும் காலச்சான்றுகள் போன்று இங்கு வீற்றிருக்கின்றன.
கோயில் வளாகத்திற்கு கிழக்கே ஒரு நந்தி சிலை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பும்ரா பாணி கலையம்சங்கள் காணப்படும் சிற்பக்கல் அமைப்புகளும் இங்கு கிடைத்திருக்கின்றன.