தேவ்கர் எனும் இந்த முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலம் அம்பிகாபூரிலிருந்து 51 கி.மீ தூரத்திலும், சூரஜ்பூரிலிருந்து 93 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. ரிஹாந்த் ஆற்றின் கரையில் உள்ள இந்த ஆன்மிகஸ்தலத்தில் பாபா போலேநாத் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கான கோயில் உள்ளது.
இது இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிவராத்திரி திருநாள் இங்கு பிரம்மாண்டமான திருவிழாவாக கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
முக்கியமான மங்கல நாளாக கருதப்படும் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சிவபெருமான வழிபடுவதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தருகின்றனர்.
மத்தியப்பிரதேஷ், பீஹார், உத்தரப்பிரதேஷ், ஜார்கண்ட், ஒரிஸா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ரிஹாந்த ஆற்றின் கரையில் உள்ள காயத்ரி மந்திர் எனும் கோயிலிலிருந்து தங்கள் பயணத்தை துவக்குகின்றனர்.
அங்கிருந்து கொண்டு வரும் புனித நீரை போலேநாத் கோயிலில் உள்ள லிங்கத்து அபஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிவராத்திரிக்கு முதல் நாளில் இருந்தே மந்திர கோஷங்கள் மற்றும் பஜனைகள் போன்றவையும் இந்த கோயிலில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
ஒரு ஆன்மீகஸ்தலமாக மட்டுமல்லாமல் ரம்மியமான இயற்கை காட்சிகள் நிரம்பிய ஒரு அற்புத பூமியாகவும் இந்த தேவ்கர் வீற்றிருக்கிறது. அமைதியாக ஓடும் ரிஹாந்த் ஆற்றுக்கு அருகில் அமைந்திருப்பதால் இப்பகுதி தனித்தன்மையான அழகோடு காட்சியளிக்கிறது.
தேவ்ரியா என்ற பெயரிலும் அழைக்கப்படும் தேவ்கர் ஸ்தலத்தில் பல்வேறு சிறு கோயில்களும் அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. இங்கு காணப்படும் ஒவ்வொரு இடிபாடுகளிலும் ஒரு கோயில் இடம்பெற்றுள்ளதை பார்க்கமுடிகிறது.
மேலும், கௌரி ஷங்கர் கோயில் ஸ்தலத்தில் சில சரித்திரச்சான்றுகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தை சேர்ந்த ராஜ வம்சம் பற்றிய குறிப்புகள் அவற்றில் காணப்படுகின்றன.