சர்குஜா மாவட்டத்தின் மற்றொரு முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமான இந்த ‘குடர்கர்’ அம்பிகாபூரிலிருந்து 82 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏப்ரல் மாததில் சைத்ரா நவரத்னா எனும் திருவிழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாக்காலத்தில் குடர்கர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்ய முடிந்தால் நல்லது. பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் கடவுளாக இங்குள்ள குடஹர்ஹி எனும் தெய்வம் பிரசித்தமடைந்துள்ளது.
அப்படி வேண்டுதல்கள் நிறைவேறியபின் பக்தர்கள் இக்கோயிலில் ஆடுகளை காணிக்கையாக பலிகொடுக்கும் சடங்கும் வழக்கத்தில் உள்ளது.
மா பாஹேஷ்வரி என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் உள்ள 6 அங்குல விட்டம் கொண்ட துளை ஒன்றில் 1000 ஆடுகளை பலிகொடுத்த ரத்தத்தை ஊற்றிய பின்னும் நிரம்பி வழியாமல் காணப்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோயிலை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். 17ம் நூற்றாண்டில் கோரியா பகுதியை ஆண்டு வந்த பலாந்த் வம்ச மன்னர்கள் இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.