சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம் சர்குஜா மாவட்டத்தின் தலைநகரான அம்பிகாபூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. அம்பிகாபூர்-தல்டோன்குஞ்ச் சாலையில் அமைந்திருக்கும் இது 430.36 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது.
இந்த சரணாலயத்திற்கு அருகில் ஜய்நகர் ரயில் நிலையம் மற்றும் 31 கி.மீ தூரத்தில் வாரணாசி விமான நிலையம் போன்றவை அமைந்திருக்கின்றன. ராம்கர் மலைகளை ஒட்டியதாக இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது.
பீஹார் மாநிலத்துடனும் இது தனது எல்லையை பகிர்ந்துகொள்கிறது. கடக ரேகை எனப்படும் வட அட்சக்கோடு இந்த சரணாலயத்தின் வழியே செல்வது குறிப்பிடத்தக்கது.
சால் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ள கலவையான இலையுதிர் காடுகளை இந்த சரணாலயம் நிரம்பப்பெற்றுள்ளது. ரிவரைன் எனப்படும் ஆற்றுச்சதுப்புநில காடுகளும் இங்கு காணப்படுகின்றன.
நில்கை மான், சிதல் மான், சம்பார் மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, நரி, காட்டுப்பூனை போன்ற விலங்கினங்கள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.
ஜனவரி முதல் மே வரையிலான பருவம் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு அருகில் சேமர்சோத் எனும் சிறு நகரம் உள்ளது. இருப்பினும் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் 50 கி.மீ தூரத்தில் உள்ள அம்பிகாபூரில் கிடைக்கின்றன.