ரிச்சன் ஜாங்போ எனும் பிரபல குருவால் 996ம் ஆண்டில் இந்த மடாலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பிட்டி வாலி எனும் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இந்த மடாலயம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது.
இந்த ஆன்மீக மையமானது உன்னதமான கல்வியைப்போதிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 11ம் நூற்றாண்ட்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை இது திபெத்திய கலைகளின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளித்து வந்துள்ளது.
இமயமலைப்பகுதியில் இன்றும் இயங்கி வரும் பழமையான மடாலயங்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையுடன் இது வீற்றிருக்கிறது. உலகெங்கிலுமிருந்தும் பயணிகளும் யாத்ரீகர்களும் இந்த புராதன மடாலயத்துக்கு விரும்பி வருகை தருகின்றனர். அற்புதமான ஓவியங்கள், சிலைகள் மற்றும் புராதன நூற் பிரதிகள் போன்றவற்றை இந்த மடாலயத்தில் காணலாம்.