டுக்-லா-காங்க் என்ற பெயரில் அழைக்கப்படும் ஞானோதயம் பெற்ற கடவுள்களின் கோவிலானது அதனுடைய பெரிய சபைக்கூடம், புனித இடம் மற்றும் அகன்ற முன்கூடம் ஆகியவற்றிற்காக பெயர் பெற்ற இடமாகும்.
டேபோ மடாலய வளாகத்தில் உள்ள கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். சபைக்கூடத்திற்கு மையமாக நான்கு-மடிப்புகளையும், ஆதிபுத்தரின் ஐந்து புதல்வர்களில் ஒருவராகவும் மற்றும் பழமையான புத்தராகவும் கருதப்படுகிற வைரோகோனாவின் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு மீட்டர்கள் நீளமுடைய இந்த சிலை தர்ம சக்கரத்தை (நீதியின் சக்கரம்) காட்டியவாறு உள்ளது. வஜ்ரதாது மண்டால என்றழைக்கப்படும் ஸ்டக்கோ வகை தத்ரூபமான ஓவியங்கள் சுற்றிலும் வட்டமான ஜுவாலைகளுடனும், அவை சுவற்றிலுள்ள பிராக்கெட்டுகளில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றன.
சபைக்கூடத்திற்கு பின்னால் அமைந்திருக்கும் புனித இடத்தில் ஐந்து போதிசத்துவர்கள் அல்லது ஞானோதயம் பெற்றவர்களின் இருப்பிடம் உள்ளது. இந்த இடத்தின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை வரைவதற்காக காஷ்மீரிலிருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.