மாலுடி கோயில்கள் எனப்படும் இந்த கோயில்களின் தொகுப்பு 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் 100க்கும் மேற்பட்ட கோயில் சன்னதிகள் அடங்கியுள்ளன.
இருப்பினும் தற்போது சுமார் 50 மட்டுமே நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. பராமரிப்பின்மை காரணமாகவே ஏனைய கோயில்கள் சிதிலமடைந்திருக்கின்றன.
இந்த கோயில் தொகுப்பு வளாகம் வெகு விரைவில் உலக பாரம்பரிய ஸ்தலமாக அறிவிக்கப்படவேண்டும் என்பதே வராலாற்று கட்டிடக்கலை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.