`பால் கங்கா', மற்றும் `தரம் கங்கா' என்கிற இரு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புடா கேதார் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பிரபலமானது. இது டெஹ்ரியிலிருந்து சுமார் 59 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்திய இதிகாசமான மஹாபாரத்தின் படி, பாண்டவர்கள் குருசேத்திர போருக்கு பின்னர் சிவனைத் தேடி புனித பயணம் மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் `ப்ருகு' பர்வத்தில் `பால்க்ஹிலி' முனிவரை சந்தித்தனர்.
அவர், பாண்டவர்களை, இந்த இரு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தவம் புரியும் வயதான மனிதரை தரிசிக்கும் படி வழி காட்டினார். அதன் படி பாண்டவர்க்ள் இங்கு வந்த பொழுது, அந்த வயதான மனிதர் மறைந்து அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியதாக நம்பப்படுகிறது. புடா கேதாரில் உள்ள சிவலிங்கம் வட இந்தியாவில் உள்ள சிவலிங்கங்களில் மிகப் பெரியதாகும்.
இந்த இடம் ஆன்மீக அன்பர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு முக்கியமான இடம் ஆகும். இந்த இடத்தில் நீங்கள் இயற்கையின் முழு மகிமையை கண்டு மகிழலாம். இது பல்வேறு மலை பறவைகளின் இருப்பிடமாக விளங்குகிறது.