ரிஷிகேஷிற்கு அருகே யமுனோதிரி-கங்கோத்ரி வழியில் நரேந்திர நகர் அமைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் இங்கு அடிக்கடி வருகின்றனர். இது கடல் மட்டத்திற்கு மேலே சுமார் 1129 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் டூன் பள்ளத்தாக்கு மற்றும் புனிதமான கங்கை நதியின் பரந்து விரிந்த அழகிய இயற்கைக்காட்சிகளை அனுபவிக்க முடியும். ஒரு காலத்தில் நரேந்திர நகர், டெஹ்ரி மாநிலத்தின் தலைநகராக விளங்கியது.
டெஹ்ரி மன்னர்களின் அரண்மனை இங்குள்ள காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் தங்குவதற்கு வசதியான ஏராளமான தங்கும் விடுதிகள் இங்கு உள்ளன.