பமுனி பஹார் என்றழைக்கப்படும் பமுனி குன்று தேஜ்பூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. 9ஆ, 10ஆம் நூற்றாண்டு காலத்திய சிலைகளின் மிச்சங்கள் இக்குன்றெங்கும் காணப்படுகின்றன.
தீவிரமாக ஆராய்ந்ததில் இச்சிலைகள் குப்தர் காலத்திய சிலைகளை ஒத்து இருப்பது அறியப்பட்டுள்ளது. பமுனி பஹார் உஷா பஹார் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
தா பார்பதியா சிலை இங்கிருக்கும் புகழ்பெற்ற சிதைந்த சிலையாகும். 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இச்சிலை கருதப்படுகிறது. இக்குன்றைச் சுற்றி கல்லினால் செதுக்கப்பட்டுள்ள சுவர்கள் அமைந்துள்ளன.
படைப்புத்திறனை எடுத்துக்காட்டும் வண்ணம் இந்த கல்வெட்டுகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கிருக்கும் சிலுவை வடிவ நிலைவிட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் புகழ்பெற்று விளங்குகிறது.