தேஜ்பூரின் மூன்றாவது பெரிய ஏரியான ஹஜாரா புகுரி 70ஏக்கர் நிலப்பரப்பில் நகரத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக அமைந்துள்ளது.
19ஆம் நூற்றாண்டில் நடந்த அகழ்வாராய்ச்சியின்படி ஹஜாரா வர்மன் என்பவரின் பெயரால் இந்த ஏரி வழங்கப்படுகிறது. கோடையின் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க குளிர்ந்த காற்றை சுமந்து வரும் பிரம்மபுத்திரா நதியுடன் சேர்ந்து ஊரில் உள்ள குளங்களும், ஏரிகளும் ஊருக்கு மேலும் குளிர்ச்சி சேர்க்கின்றன.ஏரியின் பெரிய அளவு ஊருக்கு மேலும் அழகும் ரம்மியமும் சேர்க்கின்றன.
ஊருக்கு நடுவே உள்ளதால் பயணிகள் மாலையில் ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபடலாம். ஏரியைச் சுற்றி நடப்பதும், பச்சை புல்வெளிகளில் அமர்வதும் புத்துணர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. அசாம் முழுதும் ஏராளமான புகுரிகள் (ஏரிகள்) அமைந்துள்ளன.