தேஜ்பூரில் இருக்கும் முக்கியமான கோவில்களில் மகாபைரவர் கோவிலும் ஒன்றாகும். ஊரின் வடக்கு எல்லையில் இருக்கும் இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பானாசுரா என்ற அசுர அரசன் இந்தக் கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. 1897ல் கற்கோவிலாக இருந்த இக்கோவில் ஒரு பூகம்பத்தில் அழிந்தது. பின்னர் நாக பாபா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற சாமியார் ஒருவரால் இக்கோவில் சாந்தைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது.
சிறிய குன்றின் மேல் இருக்கும் இக்கோவிலில் விநாயகர, அனுமார் ஆகிய கடவுள்களில் சிலைகள் வாயிலில் வைக்கப்பட்டுள்ளன. விரிவான நுழைவாயிலில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி முதல் மார்ச் வரை கொண்டாடப்படும் சிவராத்திரி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் அமரும் வண்ணம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.