ருத்ரபதா கோவில் பிரம்மபுத்தர நதியின் கரைகளில் அமைந்துள்ளது./ சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலின் வளாகத்தில் சிவபெருமானின் இடதுகால் தடம் உள்ளதாக நம்பப்படுகிறது.
சிவனின் கோபமான வடிவமான ருத்ர வடிவம் இங்கு வழிபடப்படுகிறது. ருத்ரா என்றால் கோபம், பதா என்றால் பாதம் என்னும் பொருளில் இவ்விடம் ருத்ரபதா என்றழைக்கப்படுகிறது.
புராணங்களின் படி சிவன் பானசுரருக்கு இவ்விடத்தில் தன் விஸ்வரூபத்தை காட்டியதாக நம்பப்படுகிறது. எனினும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் படி 1730ல் சிவசிங் என்ற மன்னனால் இக்கோவில் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லில் பதியப்பட்டுள்ள பாதத்தடம் கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.
மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானதாகும். பிரம்மபுத்திரா நதிக்கரையில் இருப்பதால் இச்சிறிய கோவிலில் இருந்து பார்க்கையில் நதி பிரம்மாண்டமாக தெரிகிறது.