வாமில் கோயில் எனும் இந்த ஆன்மீக ஸ்தலம் தனது விசேஷமான பூஜைச் சடங்குகளால் பக்தர்களையும் பயணிகளையும் ஒருசேர ஈர்த்து வருகிறது. தலச்சேரியிலிருந்து கண்ணூர் செல்லும் வழியில் பயணிகள் இந்த கோயிலை அடையலாம்.
மலபார் பகுதியிலுள்ள கோயில்களில் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் ‘தெய்யம்’ எனும் ஆட்டக்கலை வடிவத்திற்கு இந்த வாமில் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. தினமும் இந்த ஆட்டக்கலை வடிவம் இக்கோயிலில் நிகழ்த்தப்படுவதே இதன் விசேஷமாகும்.
பயணிகளும் பார்வையாளர்களும் இந்த வண்ணமயமான ஆவேசமான நடனக்காட்சியை கண்டு ரசிக்க அனுமதிக்கபடுகின்றனர். ஒவ்வொரு நாளும் மதியம் 12.30 மணிக்கு துவங்கி அரை மணி நேரத்திற்கு இந்த ‘தெய்யம்’ ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது.
மலபார் பிரதேச கோயில்களின் சடங்கு காட்சிகளையும் பாரம்பரிய ஆன்மீக அம்சங்களையும் அறிந்து கொள்ள விரும்பும் பயணிகளுக்கு இந்த வாமில் கோயில் தரிசனம் உவப்பான ஒன்றாக அமையும்.