தானே மாவட்ட த்தில் மிக முக்கிய வரலாற்று சின்னமாக கருதப்படும் இந்த சுதாகட் கோட்டையானது போப்ராகாட் கோட்டை என்றும், போரைகாட் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோட்டையின் தோற்றம் 1436 ம் ஆண்டு பாமனி சுல்தான்களின் ஆளுகைக்குள் இப்பகுதி இருந்த 2ம் நூற்றாண்டை நோக்கி பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. 1650 ம் ஆண்டு இந்த கோட்டை மராத்தாக்களால் கைப்பற்றப்பட்டு அவர்களுக்குப்பின் பேஷ்வாக்களின் வசம் இருந்து இறுதியாக 1818ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது.
சுதாகட் கோட்டையில் போராய்தேவி கோயில் அமைந்திருப்பதால் இது போராய்காட் கோட்டை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.தற்காலத்தில் இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலை ஏற்றப்பகுதியாக விளங்குகிறது.
இந்த கோட்டையின் உள்ளே ஒரு பெரிய தானியக் களஞ்சியமும், சில சமாதிகளும், இரண்டு அழகான ஏரிகளும் , ஒரு மாளிகையும், கோயிலும் சிதிலங்களிடையே காணப்படுகின்றன. மூன்று வாசல்களைக் கொண்டுள்ள இந்த கோட்டையில் மஹா தர்வாஸா வாசல் மிகப்பெரிதாக அமைந்துள்ளது.