தஞ்சாவூர் ஆர்ட் காலரி அல்லது ஓவியக்கூடமானது 1600ம் ஆண்டில் கட்டப்பட்ட தஞ்சை அரண்மனையில் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. இங்கு பல அற்புதமான சிலைகள் மற்றும் ஓவியங்களை பார்க்கலாம்.
ராஜராஜ சோழன் கலைக்கூடம் என்றும் அழைக்கப்படும் இந்த காட்சிக்கூடத்தில் பல அரிய சோழர்கால செப்புச்சிலைகளை கண்டு மகிழலாம். இவை யாவும் 9 – 12ம் நூற்றாண்டுகளை சேர்ந்தவையாகும்.
பெரும்பாலான சிலைகளை தஞ்சைப்பகுதியின் கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அன்னியர் ஊடுறுவலின்போது இவை மண்ணில் புதைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
இந்திர மந்திர், பூஜா மஹால் மற்றும் ராம சௌடம் எனப்படும் கூடம் போன்ற மூன்று தொகுதிகளாக இந்த கலைக்கூடம் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்திர மந்திர் பகுதியில் கல்லால் ஆன தெய்வச்சிலைகளும், பூஜா மஹாலில் கல்லால் ஆன சிற்பங்களும், ராம சௌடம் பிரிவில் செப்புச்சிலைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.