ஸ்வாமிநாதஸ்வாமி கோயில் என்று அறியப்படும் இந்த முருகன் கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திருவேரகம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோயில் ஒரு செயற்கைக்குன்று போன்ற அமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கிறது.
60 படிக்கட்டுகளில் ஏறி இந்த கோயிலை சென்றடையலாம். மனித வாழ்வின் சராசரி ஆயுளான 60 வருடங்களை குறிக்கும் விதமாக இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களை குறிப்பதாகவும் மற்றொரு விளக்கம் சொல்லப்படுகிறது.
மூன்று தளங்களை கொண்டுள்ள இந்த கோயிலின் மூன்றாவது தளத்துக்கு செங்குத்தான படிகளை ஏறி செல்லவேண்டியுள்ளது. இந்த மேல்தளத்தில்தான் கருவறை அமைந்துள்ளது. நடுத்தளத்தில் பிரகாரப்பகுதி காணப்படுகிறது.