சங்கீத மஹால் என்றழைக்கப்படும் இந்த இசைக்கூடம் தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும். இது தஞ்சை அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் செவப்ப நாயக்கர் எனும் நாயக்க வம்ச மன்னரால் இது கட்டப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் ஒலியியல் நுட்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இசைக்கூடமாக இது கருதப்படுகிறது. மன்னர்கள் இக்கூடத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மகிழ்ந்துள்ளனர்.
இசைக்கலைஞர்களுக்கான போட்டிகளும் இங்கு நடத்தப்பட்டிருக்கின்றன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களையும் இந்த கூடத்தில் காணலாம். தற்போது இந்த சங்கீத கூடத்தில் உள்ளூர் கைவினைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.