தேனியிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள தேவதானப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பழமையான கோவில் தான் தேவதானப்பட்டி அம்மன் கோவிலாகும். இந்த கோவில் மஞ்சள் ஆற்றின் கரையில் உள்ளது.
இந்த கோவிலின் முதன்மை நுழைவாயில் எப்பொழுதுமே மூடியிருப்பதால், இந்த கோவிலின் வாசலில் மட்டுமே பூஜை செய்யப்படும் என்ற செய்தி அதன் தனிச்சிறப்பாகும். இந்த கோவிலின் வருடாந்திர திருவிழாவான மகாசிவராத்திரியின் போது, சுற்றிலுமுள்ள கிராம மக்கள் வந்து கடவுளின் அருளைப் பெற்று செல்வார்கள்.