கைலாசநாதர் குகைக் கோவில் சுருளி நீர்வீழ்ச்சிக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து 800 மீ உயரத்தில் அமைந்துள்ளது. தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம், இந்த கோவில் குகைகளில் தமிழ் மாதங்களான ஆடி, தை மற்றும் சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதை தெரிவிக்கிறது.
இந்த கோவிலில் இருக்கும் இயற்கையான நீர்ச்சுனை மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த கோவிலிற்கு அருகில் உள்ள தர்ஹாவிற்கு 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய துறவியான அபுபெக்கர் மஸ்தான் என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வருபவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து வருவார்கள்.