டிரெக்கிங் எனப்படும் மலையேற்றப் பயணமானது தீவிர சாகச அனுபவங்களில் ஆர்வம் உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு மிகப்பொருத்தமானதாகும். வழிகாட்டிகளுடன் கூடிய ஒரு நாள் மற்றும் மூன்று நாள் மலையேற்ற திட்டங்கள் இங்கு பயணிகளுக்காக ‘ஒருங்கிணைந்த சேவை’யாக வழங்கப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள செந்தூர்ணி காட்டுயிர் சரணாலயத்திற்கு மலையேற்றப்பாதை வழியாக பயணம் மேற்கொண்டு பலவிதமான பறவைகளை ரசித்து மகிழலாம்.
சூழலியல் சுற்றுலா திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள ‘தேன்மலா தேசிய சாகச பொழுதுபோக்கு மைய’த்தின் மூலம் சிரமம் இல்லாத மலையேற்றப் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.
வெவ்வேறு பயண நேரங்களுடன் பலதரப்பட்ட வழித்தடங்களில் பயணிகளின் சக்தி மற்றும் விருப்பத்திற்கு தக்கவாறு மலையேற்ற பயணங்கள் இந்த மையத்தின் மூலம் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.
மிருஷ்டிகா சதுப்புநிலக்காடு எனும் இடத்தை நோக்கி செல்லும் 4 கி.மீ தூர மலையேற்றம் நம்மை பிரமிக்க செய்வதாகவும் காட்டு வளம் குறித்து அறிந்து கொள்ள உதவும் கல்விப்பயணமகவும் அமையும்.
சைக்கிள் சாகச பயணிகளுக்கும் இது பொருத்தமான ஸ்தலமாக உள்ளது. மிருஷ்டிகா சதுப்புநிலக்காட்டுப் பகுதியில் சைக்கிளோட்டிகளுக்கென ஒரு பாதை உள்ளது. இந்த சைக்கிள் பயணத்தோடு பறவைகளை வேடிக்கை பார்க்கும் அனுபவத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இப்பகுதியில் பல அரிய வகைப்பறவைகள் காணப்படுவது கூடுதல் விசேஷம்.