தத்தாத்ரேயரின் குகை என்று அழைக்கப்படும் வள்ளி குகை, திருச்செந்தூர் முருகன் கோவிலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலை நோக்கியபடி, மணப்பாறையின் கீழ் அமைந்துள்ள காண்பதற்கு அழகிய இடம்.
இங்கு வள்ளி, தத்தாத்ரேயரின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 24 அடி நீளமும், 21.5 அடி அகலமும் கொண்ட 16 தூண்கள் உள்ள கல் மண்டபம் ஒன்று இங்குள்ளது. முருக பெருமான், வள்ளி பற்றிய கதைகளைக் கூறும் ஓவியங்களும் இங்குள்ளன. இந்தக் குகை சமீபத்தில், கருங்கல் தரை பதித்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.