அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், பெரும்பாலும் கர்ப்பரக்ஷாம்பிகை திருக்கோயில் என்றே வழங்கப்படுகின்றது. காவேரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயில், குழந்தைப் பேறு கிடைக்க விரும்பும் தம்பதிகளுக்கு அப்பேறு வழங்கவல்லதாகும்.
உறைவிட தெய்வமாக விளங்கும் பார்வதி தேவி பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போதும், பேறுகாலத்தின் போதும் பாதுகாப்பு அளிக்கவல்லவர் என்பது நம்பிக்கை. மல்லிகைக் காட்டின் தலைவன் என்ற அர்த்தத்தில் “முல்லைவனநாதர்” என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு, இங்கு ஒரு தனி சந்நிதி அமையப்பெற்றுள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், இக்கோயில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அழகிய கோபுரமும், முன்புற தெப்பக்குளமுமாக, கோயில் நுழைவுவாயில் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது.
நிர்துரா முனிவர் மற்றும் அவரது மனைவியாகிய வேதிகா ஆகியோரைப் பற்றிய கதை இக்கோயில் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கதை, எவ்வாறு பார்வதி தேவி வேதிகாவுக்கு உர்த்வபதா முனிவரின் சாபத்திலிருந்து விமோசனம் அளித்தார் என்பதை விளக்குகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். முக்கியமாக, வாரயிறுதி நாட்களில் இக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.