”ஏழு கடல்களின் தண்ணீர்” என்பது சப்தசாகரா தீர்த்தா என்பதன் அர்த்தம். ஏழு மகா சமுத்திரங்களின் தண்ணீர் இந்த தொட்டியை நிறப்புவதாக புராணம் கூறுகின்றது. இது ஸ்ரீ உத்வகநாதா ஸ்வாமி கோவிலுக்கு அருகில் உள்ளது.
திருமணச்சேரியில் இருந்து இவ்விடத்தை எளிதில் அணுகலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புனித தொட்டி குழந்தை வரம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் வேண்டுதல் செய்துவிட்டு சப்தசாகரா தீர்த்தாவில் முழுகினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என எண்ணற்ற பக்தர்கள் நம்பி வருகின்றனர். \
சமய நோக்கத்தோடு வராவிட்டாலும், திருமணச்சேரிக்கு வரும் பக்தர்கள் சப்தசாகரா தீர்த்தத்தில் மூழ்குவதற்காகவாவது இவ்விடத்திற்கு நிச்சயம் வருகை தர வேண்டும். சப்த சாகரா தீர்த்தத்தில் மூழ்கிய பிறகு பக்தர்கள் ராகு கிரகத்தை அதற்குரிய கோவிலில் வழிபடுவார்கள்.