இந்தியாவிலேயே சனி பகவானுக்கென்று இருக்கும் ஸ்தலங்களில் முதன்மையான, சிறப்பான ஸ்தலம் திருநள்ளாறு. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடும் சக்தி வாய்ந்த சனி கிரக ஸ்தலம் திருநள்ளாறு.
சிவபெருமானை மூலவராக கொண்டு இருக்கும் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில், சனி பகவானின் திருவுருவச் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில், காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்துள்ளது.
தியாகராஜரின், ஏழு விசேஷ ஸ்தலங்களில், திருநள்ளாறும் ஒன்றாகும். சோழ சாம்ராஜ்யத்தினர் இந்த கோயிலை கட்டியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சனி பகவான், நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள பல வகையான இன்னல்களையும் தருபவர்.
ஆகையால், திருநள்ளாறு வந்து அங்கிருக்கும் சிவபெருமானை வணங்கினால், சனி பகவானின் இன்னல்களிலிருந்து விடுபடலாம்.