திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் பகுதிகளில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆதி அண்ணாமலை கோவில். அருணாச்சலேஷ்வரா கோவில் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கக்கூடும்.
எனவே, இது 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பல்வேறு தேவர்கள் மற்றும் தேவியரின் சிலைகளை கொண்ட மர கட்டிடமாக இக்கோவில் இருந்திருக்கும் என்று நம்பப்படுகின்றது.
பின்னர் கோபுரங்கள் சேர்க்கப்பட்டு, கற்களினாலும், செங்கற்களினாலும் கட்டுவதற்காக மர கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன. இக்கோவிலின் தற்போதைய வடிவம் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
’ஆதி’ என்றால் முதன்மை என்று பொருள், இக்கோவிலுக்கு இது சரியான பெயர் தான். இக்கோவில் அருணாச்சலேஷ்வரா கோவிலுக்கு பிறகு கட்டப்பட்டு இருந்தாலும், அதை காட்டிலும் இது அளவில் சிறியது.
இக்கோவில் 1/2 ஏக்கர் நிலத்தில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலில் வணங்கப்படும் லிங்கத்தை பிரம்ம தேவனே உருவாக்கினார் என்று நம்பப்படுகின்றது.