கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாகச் செல்லும் மேற்கத்திய மலைத்தொடரின் ஒரு பகுதி ஆணைமலை மலைகள். ’ஆணை’ என்றால் யாணை. வனவிலங்குகள் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கு ஆணைமலை என்கிற பெயர் பொருத்தமானது.
ஆணைமலை மலைகளின் உயரமான சிகரம் ஆணைமுடி, இது கடல்மட்டத்தில் இருந்து 2694 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த சிகரம் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது.
யுநெஸ்கோ(UNESCO ) உலக பாரம்பரிய குழு ஆணைமலை உள்பட மேற்கத்திய மலைத்தொடர் முழுவதையும் உலக பாரம்பரிய சொத்தாக கருத யோசித்து வருகிறார்கள்.
ஆணைமலை மலைகளில் ஏர்வாய்க்குளம், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, சின்னாறு வனவிலங்கு சரணாலயுஅம் மற்றும் ஆணைமலை புலிகள் சரணாலயம் ஆகியவை இருக்கின்றன.
இந்த பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் பெரிய யானைகளை பாதுகாத்து வருகின்றனர். புலிகள், புனுகுப்பூணை, சிறுத்தைப்புலி, சாம்பார், காட்டு நாய், ஸ்லோத் கரடிகள் மற்றும் நீர் எருதுகள் உள்ளிட்ட பிற விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன.