தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரஹந்த்கிரி சமண மடம் அமைந்து இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சமண சமுதாயத்திற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த சமய ஸ்தலம் ஆகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் 1998 ஆம் ஆண்டு இந்த சமண மடம் தொடங்கப்பட்டது.
நான்கு சமண கோவில்கள், மூன்று சமண குகைகள் மற்றும் நெமிநாதா சிலை ஆகியவை இந்த மடத்திற்குள் இருக்கின்றன. 16 மீட்டர் உயரம் உடைய நெமிநாதா சிலை இதன் வகையில் தமிழ்நாட்டிலேயே பெரிய சிலை ஆகும், இது 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நெமிநாதாவை மையமாக வைத்து ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்படம் எடுக்கப்பட்டது.
பட்டாரகா தவலகீர்த்தி இந்த மடத்தின் தலைவர் ஆவார், இவர் ஏழைகள் மற்றும் தேவை உள்ளவர்களுக்காக பல நிகழ்ச்சிகளை தொடங்கி இருக்கிறார். ஏழை குழந்தைகள் வளரும் இடத்தில் இவர் பள்ளிகளை திறந்துவைத்து இலவச கல்வியும், தொழிற்கல்வியும் அளித்து, அவர்கள் வளர்ந்த பிறகு வாழ வழி செய்தார்.