எட்டு லிங்கங்கள் எனப்படும் அஷ்ட லிங்கங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும், ஆணைமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசானிய லிங்கம் உள்ளிட்ட எட்டு லிங்கங்கள் இங்கு உள்ளன.
அஷ்ட லிங்கங்கள் இருப்பதால் திருவண்ணாமலை நகரம் புனிதமும், ஆன்மீகமுமான காரியங்களை எதிரொலிக்கிறது. மகான்களையும், பக்தர்களையும் இந்த லிங்கங்கள் ஈர்க்கின்றன. இந்த லிங்கங்களுக்காக இங்கு எட்டு சன்னதிகள் இருக்கின்றன.
இந்த மலை அடிவாரத்தில் 14 கி.மீ. சுற்றளவில் இந்த சன்னதிகள் அனைத்தும் இடவெளிவிட்டு கட்டப்பட்டு இருக்கின்றன. தங்கள் வேண்டுதல்களை ஏறெடுப்பதற்காக பக்தர்கள் இந்த மலையை சுற்றி செல்கிறார்கள்.
ஒவ்வொரு லிங்கத்தையும் வேண்டுவதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். ஒவ்வொரு லிங்கமும் 12 சந்திர ராசிகளோடு தொடர்பு உடையனவாக கருதப்படுகின்றன. மலையை சுற்றி வந்து வழிபடும் கிரிவலத்தின் ஒரு பகுதியாக இந்த எட்டு லிங்கங்களையும் வழிபடுகிறார்கள்.