மாமர குகை என்பது கோவிலாக மாற்றப்பட்ட ஒரு குகை, இது திருவண்ணாமலை நகருக்கு அருகே இருக்கும் ஒரு இந்து கோவில். இந்த குகையில் இருந்து மேலே பாத்தால் ஒரு மாமரம் தென்படும். உள்ளூர் இந்து மக்களுக்கு இக்கோவில் அதிக சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மகான் ரமண மகாரிஷி இந்த குகையில் ஆறு ஆண்டுகள் தியானம் செய்தார். இக்கோவிலில் மூன்று சிலைகள் இருக்கின்றன. உலகத்தின் ஆண்டவராக கருதப்படும் விஸ்வநாதர் வடிவத்தில் சிவபெருமான் இக்கோவிலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
ராஜராஜேஷ்வரி மற்றும் அன்னபூர்னா தேவி ஆகிய பெண் தெய்வங்களின் சிலை இங்கு இருக்கின்றன. இக்கோவிலுக்கு உள்ளே சித்த குருக்களின் லிங்கங்கள் சன்னதியாக்கப்பட்டு இருக்கின்றன. சித்த குருக்கள் சிவபெருமானின் வடிவமாக, அவர்களை பின்பற்றிய சித்தர்களால் வழிபடப்படுகின்றார்கள்.