திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சேஷாத்ரி ஆசிரமம் ரமணா ஆசிரமத்தின் அருகே அமைந்துள்ளது. ஸ்ரீ ரமணா ஆசிரமத்தில் இருந்து மூன்று கட்டிடங்களுக்கு அப்பால், அதே சாலையில் இந்த ஆசிரமம் இருக்கிறது.
நகரத்துக்கு வெளியே இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதியையும் ஸ்வாமிகள் ஆசிரமம் அளிக்கிறது. தங்குவதற்கான கட்டணமும் மிகக் குறைவு, சில நேரங்களில் அதை செலுத்த முடியாதவர்களிடம் இருந்து அந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
’தங்கக் கரம் உடைய மகான்’ என்று அழைக்கப்படும் சேஷாத்ரி ஸ்வாமிகளால் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. தென் இந்தியாவில் இருக்கும் மக்கள் இந்த மகானை இந்தியாவில் வாழ்ந்த வியக்கத்தகு மகானாக கருதி, அவரை வணங்குகிறார்கள்.
இந்த மகான் திருவண்ணாமலையில் வாழ்ந்து, மக்களுடைய பொருளாதார மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்த மகானை தெய்வத்துக்கு நிகராக மக்கள் வழிபடுகிறார்கள்.