14ஆம் நூற்றாண்டு முதல் இந்த விருபாக்ஷா குகை மத சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆரம்பத்தில் விருபாக்ஷ தேவா என்கிற மகான் மூலமாக புகழ்பெற்ற இந்த குகை, இக்காலத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் காரணமாக அவருடைய பக்தர்கள் இடையே சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
1899 ஆம் ஆண்டு முதல் இந்த குகையில் வாழ்ந்த மகரிஷி 16 ஆண்டுகளுக்கு பிறகு 1916ஆம் ஆண்டு தான் வெளியே வந்தார். இவ்விடத்தில் இருந்து அவர் ’சுய பரிசோதனை’ மற்றும் ‘நான் யார்’ என்கிற நூல்களை எழுதினார்.
இதன் காரணமாக ஸ்ரீ ரமண மகரிஷியை பின்பற்றுகிறவர்கள் இதை ஒரு வழிபாட்டுத்தலமாக கருதுகின்றார்கள். உள்ளான அமைதியை பெறுவதற்காக, அநேகர் இந்த குகைக்குள் உள்ளே தியானம் செய்கிறார்கள்.
ஸ்ரீ ரமணா ஆசிரமம் வழியாக ஸ்கந்தாசிரமத்தை கடந்து நீங்கள் விருபாக்ஷா குகையை அடையலாம். அருணாச்சலேஷ்வரா கோவில் வழியாக நடந்தும் விருபாக்ஷா குகையை அடையலாம்.
மகான்களுக்கு செலுத்தும் மரியாதையாகவும், பாதையாத்திரையாகவும் திருவண்ணாமலை கோவில் வழியாக நடந்து வருவதை பல பக்தர்கள் விரும்புகிறார்கள்.