தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் தனியாக உருவாவதற்கு முன், நாகப்பட்டினத்தின் பகுதியாக இருந்தது. வங்காள விரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர், கடற்கரைக் காயல்களால் நிறைந்தது. இது காவேரி நதியின் கிளை நதிகளால் உருவாக்கப்பட்ட படுகைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
திருவாரூர் நகர், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற தலைநகரங்களுள் ஒன்றாக திகழ்ந்தது. மாமன்னர் குலோத்துங்கச் சோழர் காலத்தின் போது, இந்நகரிலிருந்து ஆட்சி புரிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மேலும், இசை உலகின் மும்மூர்த்திகளாக புகழ்பெற்று விளங்கிய தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோர் அவதரித்த பெருமை வாய்ந்தது இவ்வூராகும்.
திருவாரூர் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்
தியாகராஜஸ்வாமி திருக்கோயில், கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயில், திருகண்ணபுரம் நீலமேக பெருமாள் திருக்கோயில், முடிகொண்டானில் உள்ள கோதண்டராமர் திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் ஆகியன இப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சில கோயில்களாகும். இவற்றைத்தவிர, மாநகரப் பூங்கா மற்றும் முத்துப்பேட்டை ஆகியவையும் மக்களை கவர்ந்திழுக்கும் இடங்களாக உள்ளன.
திருவாரூரை அடைவது எப்படி?
திருவாரூரை எளிதில் அடையலாம். இவ்வூர், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இருந்து சாலை வழியாகவோ அல்லது இரயில் வழியாகவோ எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது.
திருவாரூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெருநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்குகிறது. சென்னை மாநகரம் 290 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று இவ்வூரிலிருந்து செல்லக்கூடிய தொலைவிலேயே உள்ளது. திருவாரூருக்கென இரயில் நிலையம் உள்ளது. அதனால் இவ்வூருக்கு இரயில் மூல்ம் செல்வதும் எளிது.
திருவாரூரின் வானிலை
திருவாரூரில், பெரும்பாலும் வெப்ப வானிலையே நிலவுகிறது. ஜீன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலமும், இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டங்களாகும். திருவாரூரில் கோடைகாலம் மிகுந்த உஷ்ணமாக, 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான தட்பவெப்ப நிலையுடன் இருக்கும்.