“முத்துப்பெட்” என்றும் அழைக்கப்படும் முத்துப்பேட்டை, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பஞ்சாயத்துக்குட்பட்ட சிறு நகரமாகும். இச்சிறுநகரம், உப்புக் காயல்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்து, மீன்பிடித் தொழிலுக்கு ஏதுவான இடமாக அமைந்துள்ளது.
இது காவேரி படுகையின் கிழக்குக் கோடியில், கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு சாதகமான வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இவ்வூர், மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 360 கி.மீ. தொலைவில், திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் நடுவில் அமைந்துள்ளது.
முத்துப்பேட்டையில் உள்ள “ஆலையத்தி காடு” என்றழைக்கப்படும் சதுப்பு நிலக் காடு, இந்தியாவிலுள்ள் பெரிய சதுப்பு நிலக் காடுகளுள் ஒன்றாகும். முத்தெடுப்பதற்கு உகந்த இடமாகவும் இது விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து, இவ்வூருக்கு எளிதாக சென்று வரலாம்.