மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.
திருவட்டாறில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த பாலம் அமைந்து இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே உயரமான மற்றும் பெரிதான நீர்க்குழாய் என்னும் பெருமை இந்த பாலத்திற்கு உண்டு.
1966 ஆம் ஆண்டு பஞ்சத்தில் அவதிப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதலை கொடுத்த இந்த நடவடிக்கை, இப்போது ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுலா தளமாக மாறிவிட்டது.
சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிக்க சுற்றுலா துரை இந்த ஊரில் இருக்கும் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நீர்க்குழாயை சுற்றி இருக்கும் இடங்கள் ஆண்டு முழுவது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருப்பதற்காக அவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த குழாயின் மையப்பகுதியில் நின்றுகொண்டு பசும்புல் விளைநிலங்களையும், மேற்கத்திய மலைத்தொடர்களையும், மெல்ல அசையும் புல்தரைகளையும் கண்டு ரசிக்கலாம்.