தீர்பரப்பு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கு இருக்கும் நீர்வீழ்ச்சி புகழ்வாய்ந்தது. திருவட்டாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நீர்வீழ்ச்சி, சுற்றுப்புறத்தை கண்கொள்ளா காட்சியாக மாற்றியமைக்கின்றது.
கோதை ஆற்றில் இருந்து இந்த நீர்வீழ்ச்சி உருவாகின்றது. 50 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, இசையருவியாக 300 அடி நீளத்திற்கு செல்கின்றது. வருடத்தில் நான்கு மாதங்கள் தவிற பிற மாதங்களில் இந்த அருவி வழிந்து ஓடுகின்றது.
இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் கட்டி இருக்கிறது.
அருவிக்கு அருகாமையில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலை பாதுகாக்க கட்டப்பட்டு இருக்கும் பலமான அரண்களை தாண்டி பல சுற்றுலா பயணிகள் இக்கோவிலை காணச் செல்கின்றனர்.