உதயகிரி கோட்டை திருவட்டாறில் இருந்து 14 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் பட்டணத்தில் இருக்கிறது. திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், நிச்சயம் இதை யாரும் பார்க்காமல் இருக்கமாட்டார்கள்.
இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இக்கோட்டையை 18ஆம் நூற்றாண்டில் மறுகட்டுமானம் செய்தார். துப்பாக்கிகளை வைப்பதற்காகவே இந்த கோட்டை கட்டப்பட்டது.
இதற்காகவே இங்கு ஒரு படைக்களம் இருக்கின்றது, இன்னும் அது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. திப்பு சுல்தான் உள்ளிட்ட பல பிரபலமான மனிதர்களை இக்கோட்டையில் கைதியாக வைத்து இருந்தார்கள்.
காலத்தின் தாக்கம் இந்த கட்டிடத்தில் வெளிப்படுகின்றது. இருப்பினும் இக்கட்டிடம் உயர்ந்து நின்று மகத்துவமாக காட்சியளிக்கிறது. திருவட்டாறின் வீர வரலாற்றை இக்கோட்டை பறைசாற்றுகின்றது.