மணிப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கங்கபோக். மாநிலத்தின் பெரிய கிராமமான இது தௌபல் மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் மக்களை மெய்டேய்ஸ் என்று அழைப்பர். மெய்டேய்லோன் அல்லது மணிப்பூரி ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.
கங்ரா என்ற மரத்தில் இருந்து தான் கங்கபோக் கிராமம் அதன் பெயரைப் பெற்றது. இன்று இந்த கிராமம் இருக்கும் இடத்தில் தான் அந்த மரங்கள் இருந்தன. மக்கள் இந்த இடத்தில் வாழ வேண்டி மரங்களை வெட்டித் தள்ளினர்.
எனவே இந்த இடத்திற்கு கங்ராபோக்பி என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு கங்ரா வளர்ந்துள்ளது என்று பொருளாகும். இப்பெயர் காலப்போக்கில் மாறி கங்கபோக் என்று ஆனது.
இந்த இடத்தில் லோப் பட் என்றழைக்கப்படும் லோப் ஏரி மற்றும் இன்னும் சில தலங்கள் உள்ளன. பல காலமாக இந்த ஏரியின் தண்ணீர் மீன் பிடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால், உள்ளூர் விவசாயிகள் வாழ்க்கையில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள லம்லாங் பஜாரும் முக்கியமானவை.