எழில் நிரம்பிய பீச்சி அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி பீச்சி காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. பலாளிள்ளி காடுகள் மற்றும் நெல்லியம்பதி காடுகள் ஆகியவற்ற உள்ளடக்கிய இந்த சரணாலயம் 125 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.
19ம் நூற்றாண்டு வரையில் தனியார் உரிமையில் இருந்து வந்த இப்பிரதேசம் 1958ம் ஆண்டு காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரிசூர் நகரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சரணாலயத்திற்கு காட்டு விலங்குகளை பார்ப்பதற்காக மட்டுமன்றி இயற்கை செழுமையை ரசிப்பதற்காகவே அதிக அளவில் பார்வையாளர்கள் விஜயம் செய்கின்றனர்.
இங்குள்ள நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி மேற்கொள்ளும்போது கரைகளில் நீர் அருந்த வரும் யானைக்கூட்டங்களையும் பார்த்து ரசிக்க வாய்ப்புண்டு. பீச்சி வனப்பகுதிக்கு செல்ல ஏராளமான தனியார் பேருந்துகள் திரிசூர் நகரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.