திரிசூர் நகரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள ஒரு அமைதியான கிராமம் இந்த திருவில்வாமலா கிராமம் ஆகும். இங்குள்ள பல கோயில்களுக்காகவே இது பிரசித்தமாக அறியப்படுகிறது. இக்கோயில்கள் கிருஷ்ணர் மற்றும் சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் அதிகம் ராமர் கோயில்கள் இல்லை என்ற போதிலும் இந்த கிராமத்தில் விசேஷமாக வில்வாத்ரிநாத் எனும் கோயில் ராமபிரானுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயில் வெகு தூர பிரதேசங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்ப்பது குறிப்பிடத்தக்கது.
படாகப்புழா ஆற்றின் கரையில் உள்ள இந்த திருவில்வாமலா கிராமம் ஒரு அமைதியான ஆன்மிக நறுமணம் கமழும் ஸ்தலமாக காட்சியளிக்கிறது. இங்கு கொண்டாடப்படும் பரக்கோட்டுக்காவு தலப்போலி திருவிழாவானது திரிசூர் பூரம் திருவிழாவுக்கு இணையாக பிரசித்தி பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், கசவு எனப்படும் கேரள பாரம்பரிய புடவையும் இந்த கிராமத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. திரிசூர் நகரத்திலிருந்து வாடகைக்கார் அல்லது பேருந்து மூலம் பயணிகள் இக்கிராமத்தை அடையலாம்.