திருப்பதியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அப்பலாயகுண்டா எனும் இடத்தில் இந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. திருமலையை நோக்கி பயணிக்கும்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஓய்வெடுத்த ஸ்தலமாக இது அறியப்படுகிறது.
ஸ்ரீ பத்மாவதி அம்மவாருவுடன் ஆன தனது திருமணத்திற்கு பிறகு இந்த இடத்தில் சித்தேஷ்வரர் போன்ற முனிவர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சித்தி அருளியதாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த கோயிலில் விசேஷ அபிஷேக சடங்குகள் செய்விக்கப்படுகின்றன. இவற்றில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஸ்ரீ ஆண்டாள், பத்மாவதி தேவி மற்றும் ஆஞ்சநேயருக்கான சிறு சன்னதிகளும் இந்த கோயிலில் உள்ளன.