திருப்பதியிலிருந்து 48கி.மீ தூரத்தில் உள்ள கர்வெட்டிநகரம் எனும் இடத்தில் இந்த ஷீ வேணுகோபாலஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரால் குடமுழுக்கு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி இந்த கோயிலில் குடி கொண்டுள்ளார். சத்யபாமா மற்றும் ருக்மணி தேவியரின் சிலைகளும் இந்த கோயிலில் காணப்படுகின்றன. சீதாராம பட்டாபிஷேக மண்டப சன்னதியும் தனியாக இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, தெப்போத்ஸவம் மற்றும் பிரம்மோத்ஸவம் போன்ற திருவிழாக்கள் இந்த கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.