திருப்பூர் நகரத்தின் வெகு அருகாமையில் உள்ள ஆண்டிப்பாளையம் என்ற ஊரில் இந்த ஏரி அமைந்துள்ளது. குடும்பத்துடன் ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இது விளங்குகிறது. படகு சவாரி வசதி இருப்பதால், சுற்றுலா வரும் மக்களை அதிகம் கவரும் இடமாகவும் இது உள்ளது.
இந்த இடத்தில் காணும் அமைதி மற்றும் சாந்தமான சூழல் பரபரப்பான, இயந்திரமயமான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் ஓய்வு எடுப்பதற்கான ஒரு இடமாக அமைந்துள்ளது.