திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் சுக்ரீஸ்வரர் ஆலயம் ஆகும். திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்கள் காலமான பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது ஆகும். அதற்குப் பின்பு சோழர்களால் இக்கோவிலின் உள்ளே பல்வேறு மண்டபங்களும் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக் கோவில் கட்டிடக் கலைக்குச் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கட்டப்பட்டுள்ள இரு விமானங்களில் ஒன்று இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் மற்றொன்றுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும். ஐந்து லிங்கங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
இந்தக் கோவில் பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பினும் இக்கோவில் கட்டப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் சிவபெருமான் வழிபடப்பட்ட தலமாக இவ்விடம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.