சுதந்திரப் போரட்ட வீரரான திருப்பூர் குமரனின் நினைவாக அவரது திருவுருவச் சிலை இங்கு எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லா தமிழருக்கும் திருப்பூர் குமரனை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
சுதந்திரப் போராட்டத்தின் பொழுது ஒரு முறை திருப்பூரில் அமைதிப் பேரணி நடந்தது. அப்பொழுது திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் காவலர்களால் லத்தியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆனால் உயிர் துறந்த பின்னரும் இந்திய தேசிய கொடியை கைகளில் இறுக்கமாக பிடித்தபடி இருந்தார். அந்த மகா தியாகி மற்றும் சிறந்த தேச பக்தரின் நினைவாக திருப்பூரில், 'திருப்பூர் குமரன் சாலை' என்ற மிக அகல மற்றும் நீளமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.