டோங்க் நகரத்தின் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த கண்டா கர் எனப்படும் பழமையான மணிக்கூண்டு அமைப்பு பிரசித்தி பெற்றுள்ளது. இது டோங்க் நகர நவாப் முஹம்மத் சதத் அலி கான் என்பவரால் 1937ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் கதைகளின்படி, அக்காலகட்டத்தில் ஒரு கொடுமையான தொற்று நோயால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது இந்த நவாப் நிதி வசூலித்து பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகளை வழங்கியுள்ளார்; அந்த பணத்தில் இந்த மணிக்கூண்டையும் கட்டியதாக சொல்லப்படுகிறது.