கல்பவிருக்ஷா எனப்படும் இந்த பழமையான புனித மரம் டோங்க் மாவட்டத்தில் பலுண்டா கிராமத்தில் உள்ளது. தெய்வீக மரமாக கருதப்படும் இது கார்த்திகை மாதத்தில் பக்தர்களால் விசேஷமாக தரிசிக்கப்படுகிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத சக்தி இந்த கல்பவிருட்சத்திற்கு உள்ளதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.